Friday, August 27, 2010

இந்தியாவின் தேசிய பறவை காக்கை?! தேசிய விலங்கு எருமை?! .

கவின் மலரின்,..   சமுகவியல்  அறிஞர்  காஞ்சா அய்லைய்யா தொடர்பான

மிக நேர்த்தியான மொழி பெயர்ப்புக்கும் -பதிவிற்கும் வாழ்த்துக்கள் , நன்றி .
சில வருடங்களுக்கு முன்......   இலக்கில்லாத ஒரு பயணத்தின் போது, அந்த எட்டாவது அதிசயம் நிகழ்ந்தது.

கர்நாடகா மாநிலம், துங்க்பூரிலிருந்து - பெங்களூர் வரை திரு. காஞ்சா அய்லைய்யா -வுடன் தனியே பயணப்படும் பேறு வாய்த்தது.

"நீங்கள் எழுதிய புத்தகங்களில் சிலவற்றின் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன்" என்றேன். சில சந்தேகங்களை கேட்டேன். அதனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும். ஆர்வமாய் எனது இரு கைகளையும் வாஞ்சையாய் பற்றிக்கொண்டார். அத்தனை பெருமிதம் அவர் முகத்தில்.

இவை முக்கியமில்லை. ஆனால் அன்று அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டவை இன்றும் மனதில் அலையடித்துக்கொண்டே இருக்கிறது.

அந்தப் பயணத்தின்போது  "இந்தியாவின் தேசிய அடையாளங்களைப் பற்றிய பேச்சு வந்தது!  சிரித்துக் கொண்டே சொன்னார் திரு, அய்லைய்யா. 

"நமது தேசிய பறவையாக மயிலையும்,

தேசிய விலங்காக புலியையும் தேர்வு செய்து அதனை கொண்டாடுவது  மடத்தனமானது.

எந்த விதத்திலும் பிரயோஜனமில்லாத - அர்த்தம் இல்லாத ஜீவராசிகள்  இவை" என்றார்.

"பின் எவை  இருந்தால் சரி" என்று கேட்டேன்.

 " தேசிய பறவையாக காக்கையும், தேசிய விலங்காக எருமையையும் இந்திய அரசு  அறிவித்திருக்க வேண்டும்" என்றார் திரு. காஞ்சா அய்லைய்யா

"ஏன்" என்றேன்.

" சமூகத்தின் சம்பளம் வாங்காத துப்புரவு தொழிலாளி வேலை பார்க்கிறது காக்கை !

லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து காப்பாற்றுகிறது எருமை மாடுகள்!.

இவை இரண்டுமே ”கருப்பு” நிறத்தில்  பிறந்துதான் பிரச்சனை.

இவை வெள்ளை நிறத்திலோ அல்லது வேறு நிறத்திலோ இருந்திருந்தால் ஒருவேளை  அங்கீகரிக்கப் பட்டிருக்கக் கூடும். அதற்குரிய மரியாதையை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறன் " என்றார் காஞ்சா அய்லைய்யா.

எத்தனை சத்தியமான ஆனால் சாத்தியமாகாமல் போன உண்மை இது.

இன்றுவரை எங்காவது  காக்கையையும் -எருமையையும்

பார்க்கும் போதெல்லாம் ..

அய்லைய்யா வின்  புன்னகை  தவழும் முகம்

நினைவில் மலர்வதை தவிர்க்க முடியவில்லை!!.

Thursday, August 26, 2010

நமது வாக்கு மின்போல் அடித்திடுக!

நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக.
நமது நெஞ்சினிலே மின்னற் விசிறிப் பாய்க.
நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக.
நமது வாக்கு மின்போல் அடித்திடுக.
மின் மெலியதைக் கொல்லும்
வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.

-மகாகவி பாரதி